அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓசூர், ஜூலை 3: ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, வட்ட தலைவர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். 21 மாத கால நிலுவை தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி, பாதிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அத்தனையும், காலம் முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் ஐந்து சதவீதமாக குறைந்த பட்சத்தை கைவிட்டு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தப்பட்டது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை