அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு

 

கோவை, மே 31: கோவை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 27 உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இந்த கலந்தாய்வு கோவை ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் நடந்தது. இதில், கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, சிறப்பாசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 31 பேர் பங்கேற்றனர். இவர்களில் 27 பேர் தாங்கள் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை