‘அம்மாவின் மறு உருவமே சின்னம்மா’ என சசிகலாவுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர் ஒட்டிய மாவட்ட துணைச்செயலாளர்: குழப்பத்தில் அதிமுக

மதுரை: மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ‘அம்மாவின் மறு உருவமே சின்னம்மா’ என்ற வாசகத்துடன் திருப்பரங்குன்றம், செல்லூர் பகுதிகளில் சுஜாதா போஸ்டர் ஒட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அ.தி.மு.க புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் ‘ ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா’ என்ற வாசகத்துடன் மதுரை திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், அண்ணாநகர், செல்லூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். 
மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போஸ்டர் ஒட்டியதைத் தொடர்ந்து இன்று மீண்டும் அ.தி.மு.க மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் நிர்வாகிகளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை வழிநடத்த சசிகலாவை வேண்டுகோள் விடுக்கும் வகையில் அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். ஆனால் யார்? யாரிடமோ? போன் போட்டு பேசி அதை சசிகலா காட்சிப்படுத்தி வருகிறார் என நேற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். 

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை