அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

பென்னாகரம், நவ.18: பென்னாகரம் அருகே உள்ள சாலை குள்ளாத்திரம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில்இ நாளை (19ம் தேதி) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் காளியம்மன் கோயிலில் இருந்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நேற்று பம்பை மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. நாளை காலை, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள், பங்காளிகள் செய்துள்ளனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’