அம்மன் கோயிலில் தாலி திருட்டு

 

பண்ருட்டி, ஜூன் 24: பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ளது சிறுதொண்டமாதேவி கிராமம். இக்கிராமத்தில் தில்லை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம்போல் பூசாரி கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலையில் கோயிலை திறக்க வந்து பார்த்தபோது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த மாங்கல்யம் மற்றும் குண்டு உள்ளிட்ட 15 கிராம் தங்க நகையை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை