அம்பத்தூர் உள்பட 7 இடங்களில் பொது கழிப்பறை கட்டும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

அம்பத்தூர்:  தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ2 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் பொது கழிப்பறை கட்டும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சி 7வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச பொது கழிப்பறை கட்டித்தர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், ரூ2 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் பேருந்து நிலையம், மார்க்கெட், அத்திப்பட்டு சின்னகாலனி, கொரட்டூர், மாதனங்குப்பம் உள்ளிட்ட 7 இடங்களில் பொது கழிப்பிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.  இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, கிழக்குப்பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், டிஎஸ்பி ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ரங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!