மதுரை: அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என பாஜ கட்சியினர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, விமான நிலைய பகுதியில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் அவனியாபுரம் போலீசார் பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி பாஜவை சேர்ந்த மதுரை மானகிரி கோகுல் அஜித், விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், மனுதாரர்கள் தரப்பில் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஆக.29க்கு தள்ளி வைத்தார்….