தாராபுரம்: தாராபுரம் வருகை தந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு, அமைச்சர் கயல்விழி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாராபுரம் அருகே, ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் மதிவேந்தனுக்கு, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். இதன்போது, தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், துணை செயலாளர் தவச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.