அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக அயலக அணி நிர்வாகிகள்

திருப்புத்தூர், ஜூலை 28: சிவகங்கை மாவட்ட திமுகவின் அயலக அணியின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனிடம் வாழ்த்து பெற்றனர். திமுகவின் சிவகங்கை மாவட்ட அயலக அணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவகங்கை மாவட்ட அயலக அணியின் தலைவராக காஞ்சிரங்கால் ஆர்.வி.எஸ்.சரவணன், துணை தலைவராக காரைக்குடி ரெ.ஜான்பீட்டரும்,

மாவட்ட அமைப்பாளராக காளையார்கோவில் எம்.அஜித்குமாரும், துணை அமைப்பாளர்களாக கண்டவராயன்பட்டி சண்.சுப்பையா, இரணியூர் செண்பகம்பேட்டை எஸ்.நெடுஞ்செழியன், சிங்கம்புணரி ஆர்.புகழேந்தி, அரளிக்கோட்டை நா.சதீஸ்குமார், எஸ்.வி.மங்கலம் கே.சிவசுப்பிரமணியன், சித்தன்குடி கே.ராஜ்குரு, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திமுக சிவகங்கை மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கேஆர். பெரியகருப்பனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை