அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வாழ்த்து

ஓசூர், ஜூன் 7: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கோபிநாத் 1 லட்சத்து 92 ஆயிரத்து 486 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்காக பல வியூகங்களை அமைத்து கொடுத்த, மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியிடம் வெற்றிக்காக அயராது பாடுபட்ட, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் சென்னையில் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி கூறினர். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி பார்வையாளர் பார். இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் முருகன், ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை