சாக்ரமெண்டோ: அமெரிக்காவின் சாக்ரமெண்டோ நகரில் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சத்தம் கேட்ட மக்கள் அலறியடித்து நாலாபக்கம் சிதறி ஓடினர். தகவலறிந்த வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்ததும், 9 பேர் படுகாயமடைந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை வைத்தும், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதை வைத்தும் சாக்ரமெண்டோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்….