அமெரிக்காவில் இருந்து எனது ட்விட்டர் கணக்கு ஹேக்… பதிவுகள் அனைத்தும் அழிப்பு : நடிகர் குஷ்பூ புகார்

சென்னை : நடிகை குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதோடு அந்த பக்கத்தில் இருந்த அனைத்து பதிவுகளும் நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன. நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக தனது கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை சிலர் ஹேக் செய்து இருக்கின்றனர்.அது மட்டுமின்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டு இருந்த அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், தனது ட்விட்டர் கணக்கை கடந்த 3 நாட்களாக பயன்படுத்த முடியவில்லை என்றும் அமெரிக்காவில் இருந்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும் குஷ்பூ தெரிவித்து இருக்கிறார்.ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்திலும் சைபர் க்ரைம் காவல் துறையினரிடமும் நடிகை குஷ்பூ புகார் அளித்துள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை