காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி,கேரளாவில் இரண்டு முறை முதல்வராக இருந்துள்ளார். இவர் கோட்டயம் மாவட்டத்திலுள்ள புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 1970 முதல் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்த தேர்தலிலும் இதே புதுப்பள்ளி தொகுதியில் தான் உம்மன் சாண்டி போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் தொகுதியில்போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் உம்மன் சாண்டியிடம் கேட்டுக் கொண்டது. இந்த தொகுதியில் தான் பாஜகவின் ஒரே ஒரு வேட்பாளர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியை பாஜகவிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பது தான் காங்கிரசின் திட்டமாகும். அதற்கு வலிமையான ஒரு தலைவர் தேவை என்பதால் தான் உம்மன் சாண்டியிடம் நேமம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டது….