அரக்கோணம் : அரக்கோணம் இரட்டைக்கொலை சம்பவத்தில் கொலையாளிகளான சாதிவெறியர்ககளைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஆர்ப்பாட்டம் செய்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பங்கேற்கிறார்.அரக்கோணம் அருகே சோகனூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக சூர்யா, அர்ஜுனன் அடித்துக் கொல்லப்பட்டனர். …