அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள், பொருட்களை அள்ளி சென்ற வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சி.வி.சண்முகம் புகார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து ஆவணங்களை அள்ளி சென்ற வழக்கை சிபிஐ மற்றும் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்மூகம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக தலைமை அலுவலகத்தை கடந்த 11ம் தேதி கைப்பற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரத்தில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக ராயப்ேபட்டை போலீசார் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கலவரத்தின்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், பத்திரங்களை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் ராயப்பேட்டை போலீசார் கலவரத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர். ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. வேனில் ஏற்றி செல்லும் வீடியோ ஆதாரங்கள் அளித்தும் இதுவரை ராயப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நடந்த கலவரம் மற்றும் தலைமை அலுவலகத்தில் நடந்த திருட்டு வழக்கை சிபிஐ அல்லது பிற ஏஜென்சிகள் விசாரணைக்கு மாற்ற வேண்டும்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்