சென்னை: உட்கட்சி மோதல் காரணமாக அதிமுக, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் உறுப்பினரும் ஜே.ஜே. கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பி.ஏ.ஜோசப் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘முகாந்திரம் இல்லாமல் இதுபோன்ற மனு தாக்கல் செய்துள்ளதால் கூடுதலாக ரூ.25,000 சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்’’ என எச்சரித்த தலைமை நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்….