அதிமுக அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நடந்த மோதல்; சிபிஐ-க்கு மாற்றுமாறு தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். தரப்பு

சென்னை: அதிமுக அலுவலகத்துக்கு உலையும், வெளியேயும் நடந்த மோதல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுமாறு தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர், ராயப்பேட்டை காவல் நிலை ஆய்வாளர் ஆகியோர்க்கு ஈ.பி.எஸ். தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமையலகம் முன் நடந்த தாக்குதலில் தங்கள் தரப்பு ஆதரவாளர்களை மட்டுமே காவல்துறை கைது செய்துருப்பதாகவும், ஓ.பி.எஸ். தரப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் முக்கிய ஆவணங்களை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சி.வி. சண்முகம் விமசித்துள்ளார். எனவே சிபிஐ அல்லது அது போன்ற சுகத்திரமாக செயல்படக்கூடிய அமைப்புக்கு வழக்குகளை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் சி.வி. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்