அதிமுகவிலிருந்து 10 பேரை நீக்குவதாக அறிவிப்பு; இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கம் நியமனம்.! ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவிலிருந்து உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி உள்பட 10 பேரை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். சிறுணியம் பலராமன், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, கடம்பூர் ராஜூ, வி.எஸ்.சேதுராமன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் ஆர். வைத்திலிங்கம், இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி, கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபோன்று அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உளப்பட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 10 பேர் நீக்கப்படுவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிறுணியம் பலராமன், எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன்,  ரவிசந்திரன்,  ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, கிருஷ்ணமுரளி மற்றும் விஎஸ் சேதுராமன் ஆகிய 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுகவில் தொடரும் போட்டி நீக்க அறிவுப்புகளால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக நியமனம் மற்றும் நீக்க அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதனால், தொண்டர்களிடையே கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை