கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட 6 பேர் மீது, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டல் விடுத்ததாக அதிமுகவை சேர்ந்த ஆதிநாராயணன் புகார் அளித்தார். இதன் பேரில் வானதி சீனிவாசன் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவானது. இந்த வழக்கு நேற்று கோவை ஜே.எம்.எண் 5 நீதிமன்றத்தில் நடந்தது. இதற்காக வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் ரகுமான், வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்….