அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது

திருப்பரங்குன்றம், ஜூலை 19: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்ஆர்வி மக்கள் நல மன்றம் சார்பில், திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படித்து, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

திருநகர் பாண்டியன் நகரில் உள்ள பாரதியார் பூங்காவில் நடைபெற்ற விழாவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், மாமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கினர். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அறங்காவலர் சண்முகசுந்தரம் ஊக்கத்தொகை வழங்கினார். இதில் எஸ்ஆர்வி மக்கள் நல மன்ற தலைவர் அய்யல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி