மண்டபம், மே 8: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் சத்யா நகரைச் சேர்ந்த முருகேசன் மனைவி முனியம்மாள்(57). இவர் உடல் நலத்திற்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில், மே 5ம் தேதி இவரை மட்டும் வீட்டில் விட்டு விட்டு, அவரது மகன் உள்ளிட்டோர் கோயில் விஷேசத்திற்கு சென்று விட்டனர். சுவாமி கும்பிட்டு விட்டு மதியம் வீட்டிற்கு திரும்பிய போது முனியம்மாள் மயங்கி கிடந்தார். அவர் அருகே கிடந்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான மாத்திரை அட்டையில் எண்ணிக்கை குறைந்திருந்தன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட முனியம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், தேவிபட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.