கடலூர், ஆக. 13: கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. கடலூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றது. கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா முன்னிலை வகித்தார். தடகள சங்க பொருளாளர் அசோகன் வரவேற்றார்.
முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தடகள சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், பயிற்சியாளர்கள் மாயகிருஷ்ணன், ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் கடலூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டது.