அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை, வணிக ஆலோசனை

 

தஞ்சாவூர், செப். 21: தஞ்சாவூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

மேலும் நடப்பு நிதியாண்டில் அட்மா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விளக்கிக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொ)வினோதினி, தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ் செல்வி, உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய் ஜி பால், வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனை துறை வேளாண்மை அலுவலர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் வாசுதேவன் செய்திருந்தார்.

 

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி