அடுத்த 5 ஆண்டுகளில் 14 நமீபியா சிறுத்தைகள் வருது: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘சமீபத்தில், நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு  கொண்டு வரப்பட்டு எட்டு சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில்  விடப்பட்டன. இதில் 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கும். தற்போது 8 சிறுத்தைகளும் வனப்பகுதியில் வேட்டையாடத் தொடங்கியுள்ளன. அவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இதற்காக நமீபியா அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வரும் திட்டத்திற்காக ரூ .38.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு