அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை

 

பந்தலூர், அக்.1: அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லியாளம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பந்தலூர் கிளை சார்பாக மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் பெரியார் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

மாவட்ட குழு உறுப்பினர் வர்கீஸ், பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் இராசி இரவிக்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பந்தலூர் பஜாரில் இருந்து நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று, நகராட்சி ஆணையாளர் முனியப்பனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி