அஞ்சுகூட்டுவிளையில் ₹11.8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்

கன்னியாகுமரி, அக். 17: கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சுகூட்டுவிளை இந்திரா காலனியில் விஜய் வசந்த் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ₹11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார். கவுன்சிலர் பூலோகராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர் சேம் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய் வசந்த் எம்.பி புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி செயல் அலுவலர் ஜீவநாதன், முன்னாள் கவுன்சிலர் தாமஸ், திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை