அஜ்ஜனூரில் வீட்டின் கதவை உடைத்து நகை, லேப்டாப் கொள்ளை

 

தொண்டாமுத்தூர், ஜூலை 20: கோவை அருகே வீரகேரளம் அஜ்ஜனூர் கீர்த்தி நகரை சேர்ந்தவர் கீர்த்தி ராஜ் (37). இவர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தையும் வீட்டில் இருந்து 11ம் தேதி இரவு கிளம்பி தேவராயுபரத்தில் உள்ள அப்பா வீட்டிற்கு சென்றுள்ளனர். மறுநாள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது 2 பவுன் தங்க வளையல் மற்றும் லேப்டாப் செல்போன் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து நேற்று அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கேமரா மூலமாக லாரிகள் கண்காணிப்பு

இடிகரை பேரூராட்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள பணிகளை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு

ஆலந்துறை அருகே வீரபத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா