மத்திய அரசு விளக்கம்
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்க மகாராஷ்டிரா ஆளுநருக்கு அதிகாரம் உண்டு
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/23/2013 10:56:43 AM
மும்பை: சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்க மகாராஷ்டிரா ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், மகாராஷ்டிரா ஆளுநரிடம் சஞ்சய் தத் முறையீட்டால் அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்துவார் என்று கூறியுள்ளார்.
இதனிடையே சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கும் படி மகாராஷ்டிரா ஆளுநரிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயாபச்சன் தெரிவித்துள்ளார். மும்பை சேர்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சஞ்சய் தத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்க கோரி பல இடங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் சஞ்சய் தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!