Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மாணவியிடம் சில்மிஷம் மரத்தில் கட்டி ஆசிரியருக்கு தர்மஅடி

கருத்துகள்


MORE VIDEOS

பழநி:பழநி அருகே பதினாறுபுதூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 5 மாணவிகள், 5 மாணவர்கள் என மொத்தம் 10 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். ஆசிரியராக ஓபுளாபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (33) பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி 3ம் தேதி முதல் தலைமையாசிரியை விடுப்பில் சென்றார். இதையடுத்து ஜெயசந்திரன் மட்டுமே பணியில் இருந்துள்ளார். இவர் அவ்வப்போது தனது செல்போனில் ஆபாச படங்களை மாணவிகளிடம் காண்பித்து வந்துள்ளார். நேற்றுமுன் தினம் 5ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆபாச படங்களை காண்பித்து சில்மிஷம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இந்நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டு பள்ளிக்கு வந்து ஜெயச்சந்திரனை தாக்கி, மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். தகவலறிந்த டிஎஸ்பி குப்புராஜ் தலைமையில் போலீசார் மற்றும் ஒட்டன்சத்திரம் தாசில்தார் விஜயலட்சுமி, தொடக்க கல்வி அலுவலர் ஆனந்தம் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். துறை ரீதியாகவும், காவல்துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவரை மீட்டு கொண்டு வந்தனர். அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் செருப்பு, துடைப்பத்தால் மேலும் அவரை சரமாரியாக தாக்கினர். போலீசார் அவரை பத்திரமாக மீட்டு சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.


Panchayat Union on the opening of the school is near palani patinaruputur. Click here for 5, a total of 5 to 10 students

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran