பாகிஸ்தான் முன்னாள் அதிபர்
முஷாரப்புக்கு முன்ஜாமீன் விரைவில் நாடு திரும்புகிறார்
கருத்துகள்
கராச்சி : பர்வேஸ் முஷாரப் 1999ம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைபற்றினார். அவர் பதவியில் இருந்த காலத்தில் சில நீதிபதி கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர், முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக இவரது பெயர் சேர்க்கப்பட்டது. அரசியல் நெருக்கடி காரணமாகவும், கைது செய்யப்படும் அச்சம் காரணமாகவும் 2009ம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி சவுதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தார். அப்போதுமுதல் அவர் சவுதி அரேபியா, இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வரும் மே 11ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதில் இவரது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்துடன் முஷாரப் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார். அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படாமல் இருக்க அவரது மகள் அயிலா ரஸா கராச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இது குறித்து முஷாரப்பின் வழக்கறிஞர் அகமது ரஸா கசூரி கூறுகையில், ''முஷாரப் மீதான 3 வழக்குகளிலும் நீதிபதி சஜ்ஜத் அலி ஷா முன்ஜாமின் வழங்கியுள்ளார். இதனால் விரைவில் அவர் நாடு திரும்புவார்’’ என்றார்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!