இன்று இரவு 8.30,9.30 வரை விளக்குகளை அணைப்போம்
கருத்துகள்
சிங்கப்பூர் : பூமியில் தட்பவெப்ப நிலை மாற்றத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக, உலகம் முழுவதும் இன்று இரவு பூமி நேரம் அனுசரிக்கப்பட உள்ளது. இதன்படி, இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரையில் ஒரு மணி நேரம் வரை அத்தியாவசியமானதை தவிர்த்து மற்ற மின் விளக்குகளை அணைத்து பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த பூமி நேர நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் 7,000 நகரங்கள் பங்கு கொள்கின்றன. இந்தியா வில் மட்டும் 150 நகரங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. மாறிவரும் தட்பவெப்ப நிலை, மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் வெப்பம் ஆகியவற்றை தடுப்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!