கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணுடன் தொழிலதிபர் கத்தியால் குத்திக்கொலை
கருத்துகள்
நாகர்கோவில் : நாகர்கோவில் ராணித்தோட்டம் தடி டிப்போ ரோடு பகுதியில் வசித்து வந்தவர் மாஹின் ஷா (44). தொழிலதிபர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இவரது கம்பெனியில் கிறிஸ்டல் ராணி (35) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி கணவரும், குழந்தைகள் உள்ளனர். நாளடைவில் மாஹின்ஷாவுடன் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன், மனைவியாக குடும்பம் நடத்த ஆரம்பித்தனர். இது அவரது தம்பி அமீர் அனீசுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அமீர் அனீஷ் தனது நண்பர்கள் ரிபாய், கட்டையன்விளையை சேர்ந்த அன்பு, சையது அலி ஆகியோருடன் மாஹின்ஷா வீட்டுக்கு வந்து அனைவரும் மது அருந்தினர். பின்னர் அமீர் தனது அண்ணன் மாஹின்ஷாவை அறையில் இருந்து வெளியே அழைத்து கிறிஸ்டல் ராணி குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தகராறில் அமீர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாஹின்ஷாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் கிறிஸ்டல் ராணியையும் கொலை செய்துவிட்டு அனைவரும் தப்பினர். இது குறித்து வழக்கு பதிந்த ஆசாரிப்பள்ளம் போலீசார் நேற்று அமீர் அனீசை பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!