நள்ளிரவு முதல் அமலானது டீசல் விலை 45 காசு உயர்வு
கருத்துகள்
புதுடெல்லி : டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 45 காசு உயர்த்தப்பட்டது. விலையேற்றத்துக்கு பின்னர் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.51.78க்கு விற்பனையாகிறது. டீசல் விற்பனை மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யும் வகையில் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு சந்தை விலைக்கு வழங்கவும், சில்லரை விற்பனை விலையை ஒவ்வொரு மாதமும் 50 காசு வரை உயர்த்திக் கொள்ளவும் கடந்த ஜனவரியில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி ஜனவரி 18, பிப்ரவரி 16 ஆகிய தேதிகளில் தலா 45 காசு விலை உயர்த்தப்பட்டது. மார்ச் 16ம் தேதி பெட்ரோல் விலையை ரூ.2.40 குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை லிட்டருக்கு 45 காசு உயர்த்தப்பட்டது. சென்னை யில் டீசல் விலை, வரிகள் சேர் த்து 55 காசு உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் டீசல் ரூ.51.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!