அபுதாபியில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா: லியோனி தலைமையில் அரங்கம்
2013-12-26@ 11:58:24

அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பில் அபுதாபி இந்தியன் பள்ளி கலையரங்கில் டிசம்பர் 20ம் தேதி மாலை 6 மணிக்கு அமைப்பின் 12 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளை சங்கீதா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புரவலர்கள் சம்பத், நோபல் மெரைன் ஷாகுல் ஹமீது ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பல ஆண்டுகள் தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் உள்பட பலரை 'அபுதாபி பாரதி நட்புக்காக' பாராட்டி வருவதும் மிகவும் பாராட்டுக்குரியது. இன்று இவ்வரங்கமே நிறைந்திருப்பது இவ்வமைப்பினர் மீது அபுதாபி தமிழர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பே காரணம்.
அடுத்த வருடம் இதைவிட மிகப் பெரிய அரங்கில் விழா நடக்க ஏற்பாட செய்வோம்' என்று மக்களின் கரவொலிக்கிடையே கூறினார். அபுதாபியில் களைகட்டிய லியோனி பட்டிமன்றம் புரவலர்களுக்கு அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் ஹலீல் ரஹ்மான் ஆகியோர் நினைவுப்பரிசை வழங்கினர். முன்னதாக அபுதாபி நாட்டிய ஆசிரியை ஆஷா நாயரின் தலைமையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்ததாக, திண்டுக்கல் ஐ.லியோனியின் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது. 'இன்றைய திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது நடிகர்களே..!, கதையே..!, இயக்குநர்களே..!, இசையே..! ' என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொல்லரங்கில் அமுதா லியோனி, இனியவன், குமரி ஆதவன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்
தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்
காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான நடைபயணம்
இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!