Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஏமாறாமல் இருக்க என்ன வழி?

பதிவு செய்த நேரம்:2013-03-23 09:39:06
MORE VIDEOS

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்னு பழமொழி. கல்யாணம் பண்ணுவது கூட இப்ப ஓரளவுக்கு சுலபம். ஆனா, வீடு கட்டுவது...
முதல்ல இடம் அமையணும். பிறகு பிளான். இன்ஜினியர், பணம், பார்க்க ஆள், பொருள் எல்லாம் சரியா அமையணும்.
இடம் வாங்கவே இப்பல்லாம் பிரச்னை. விலை ஒரு பக்கம் ஏறிகிட்டே போகுது. அது கூட பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கிடறோம்னு வைங்க. ஆனால் ஏமாற்று பேர்வழிகளை கண்டுபிடிச்சு வாங்கறதுக்குள்ளே போதும் போதும் என்றாகிவிடும்.
எங்க, எந்த இடம் வானங்கினாலும் முதல்ல 30 வருஷம் வில்லங்க சான்றிதழ்   (மீரூ நீuனீதீமீக்ஷீமீரூ நீமீ நீமீக்ஷீtவீயீவீநீணீtமீ)   சார் பதிவாளர் அலுவலகத்தில் போட்டு பார்க்கணும். பிறகு நல்ல ஒரு வக்கீலிடம் வாங்கும் இடத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கா என்று கருத்து கேட்க வேண்டும்.
அந்த ஏரியா தெரிஞ்ச இஞ்ஜினியர்கிட்ட அது கட்டிடம் கட்ட ஏதுவான இடமான்னு தீர விசாரிக்கணும். கட்டின வீட்டை வாங்கறவங்க இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும். மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு விற்கிறவர் பெயரில் இருக்கான்னு பார்க்கணும். பில்லெல்லாம் ஒழுங்கா கட்டியிருக்கானு பார்க்கணும். முறையான வாரிசுகள்தானான்னு ஒருமுறைக்கு இருமுறை விசாரிக்கணும்.
அக்ரிமெண்ட் போடும் போது மிக ஜாக்கிரதையாக போட வேண்டும். சில சமயம் அக்ரிமெண்ட் போட்டு விட்டு அதை விட விலை அதிகமாக கிடைக்குதுன்னு வேற ஒருவருக்கு வித்துருவாங்க. காலி இடத்துக்கு வரி கட்ட வேண்டியது இல்லை. வீடு கட்ட பிளான் அப்ரூவல் ஆன பிறகு, எத்தனை வருடம் அந்த இடம் காலியா இருந்ததுன்னு பார்த்து வரி போடுவாங்க.
வீடு கட்ட சரியான பிளான் போடணும். போடும் பிளானுக்கு மேல் குறைந்தது ரூ 2 லட்சமாவது அதிகமாக வைத்திருக்க வேண்டும். சரியான இன்ஜினியரை தேர்வு செய்ய வேண்டும். இன்ஜினியரிடம் முறையாக அக்ரிமெண்ட் போட வேண்டும். பலருடைய ஆலோசனைகளையும் கேட்டு தீர்க்க மாக நாமே இறுதி முடிவு எடுக்க வேண்டும். வீடு பாதுகாப்பா இருக்கிற மாதிரி பிளான் போடணும். பிளான் அப்ரூவல் வாங்கின பிறகே கட்ட ஆரம்பிக்க வேண்டும்.
பேங்கில் லோன் வாங்கணும்னா பிளான் அப்ரூவல் வாங்கிய பின், வங்கி சொல்லும் வக்கீலிடமும், இன்ஜினியரிடமும் அப்ரூவல் வாங்க வேண்டும். வீடு கட்டும் பணியை எவ்வளவு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும், அவர்களை மட்டுமே நம்பி விட வேண்டாம். அது பின்னர் உறவுக்கும் சேர்த்து உலை வைக்கும். சில இடங்களில் தண்ணீருக்கு போர் (தீஷீக்ஷீமீஷ்மீறீறீ) தேவைப்படும். முதலில் நீரோட்டம் பார்த்து போர் போட்ட பிறகு வீடு கட்ட ஆரம்பிப்பது நல்லது.
முன் கூட்டியே தற்காலிக மின் இணைப்பு வாங்கி விடுவது நல்லது. பக்கத்து வீடுகளில் மின்சாரம் எடுக்க வேண்டாம். மின் இணைப்பு வாங்கும் போதே மும்முனை (tலீக்ஷீமீமீ ஜீலீணீsமீ) இணைப்பு வாங்கி விடுவது நல்லது. இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை வாடகைக்கு விடறதுன்னா அதுக்கு மேலே யோசிக்கணும். முறையா அக்ரிமெண்ட் போட்டு, முடிந்தவரை டிரான்ஸ்ஃபர் கிடைக்கும் வேலையில் இருப்பவர்களை வைத்தால், வேறு ஊருக்கு மாற்றாலானால் ஆவது வீட்டை காலி செய்து விடுவார்கள்.

மேலும் செய்திகள்

மேலும்

செய்திகள்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran