சென்னையில் வீட்டுமனை கண்காட்சி
பதிவு செய்த நேரம்:2013-03-23 09:38:37டர்ன் கீ ஈவன்ட்ஸ் மற்றும் ஐ டீல் ஆட்ஸ் அன் ஈவன்ட்ஸ் இணைந்து நடந்தும் மெட்ரோ பிராபர்ட்டி எக்ஸ்போ 2013 என்ற வீட்டு மனை கண்காட்சி மார்ச் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நந்தம்பாக்கம், சென்னை டிரேட் சென்டரில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 70 கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை ஒரே இடத்திற்கு கொண்டு வந்து வீடு வாங்குவோரின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இது குறித்து நிர்வாக இயக்குனர்கள் டி.கே.ராதா கிருஷ்ணன் மற்றும் வி.பிரபு கூறியதாவது:
குறிப்பிட்ட பிரிவுகளில் வீடு வாங்குவோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு விதமான குறைந்த விலை சொத்துகளை ஒரே இடத்தில் கொண்டதாக இந்த கண்காட்சி இருக்கும். இந்த ஆண்டின் மெட்ரோ பிராபர்டி எக்ஸ்போவில் அடுக்கு குடியிருப்புகள் தொடங்கி வில்லாக்கள் வரை பல்வேறு விதமான சொத்துகள் ரூ 3 லட்சம் முதல் ரூ 3 கோடி வரையிலான விலையில் இடம் பெற்றிருக்கிறது.
இந்த கண்காட்சியில் ஷெல்ட்ரெக்ஸ் மேலும் பிற வீட்டுமனை, கட்டுமான நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. மேலும் இக்கண்காட்சியில் பல பரிசுகளும், சலுகைகளும் வழங்கப்படுகிறது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.










