வெந்தயக் கஞ்சி
மாற்றம் செய்த நேரம்:3/21/2013 5:02:35 PM
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி - 200 கிராம்,
வெந்தயம் - 1 கைப்பிடி,
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
தண்ணீர் - 400 மி.லி.,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
அரிசியை நன்கு கழுவி வைக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் கழுவிய அரிசியையும், வெந்தயத்தையும் போட்டுக் கொதிக்க விடவும். கஞ்சி போல வெந்ததும், இறக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து உண்ணவும். இந்தக் கஞ்சியை வாரம் 3 நாள் எடுத்துக் கொண்டால், நன்றாக பால் சுரக்கும். உடல் குளிர்ச்சியடையும்.




















